School Lunch program

பள்ளி மதிய உணவுத் திட்டம்

தமிழ் விளக்கம்

இலவச மதிய உணவுத் திட்டம் தமிழகத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டமாகும். வறுமையின் காரணமாக பள்ளி வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவைப்பதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியையும் மனதில் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. நீதிக் கட்சி ஆட்சிக் காலத்திலேயே அப்போதைய சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டமாக மாறியது. 1955ம் ஆண்டு மார்ச் 27 ந்தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், சென்னை மாகாணத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க அப்போதைய முதல் அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த கல்வித்துறை இயக்குனர் நெ. து. சுந்தரவடிவேலுவிடம் தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்குவது பற்றி முதன்முதலாக ஆலோசித்தார். பின்னர் இந்த மதிய உணவுத் திட்டம் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வருவாய்த்துறை செயலாளர் பல ஆட்சேபணைகளையும் சந்தேகங்களையும் எழுப்பினார். அதற்கெல்லாம் காமராஜர் பதிலளித்தபின், முடிவில் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதென்றும், முதலில் எட்டயபுரத்தில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், 1956 ஆம் ஆண்டு முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்தைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் காமராஜர் பேசுகையில்: 'அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித்தோம். இப்போது பள்ளிக்கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும். எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல் உணவு திட்டத்திற்குப் பிச்சை எடுக்கச் சித்தமாக இருக்கிறேன். என்று மனமுருகக் கூறினார். இது எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவுத் திட்டமாக விரிவடைந்தது. திமுக ஆட்சியில் சத்துணவில் முட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், அதிமுக ஆட்சியில் சத்துணவில் புதிய உணவுப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியாவில், மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்டங்களின் நோக்கத்திற்கு ஏற்ப எல்லா மாநிலங்களிலும் மத்திய அரசின் நிதி உதவியுடன் தற்போது அமுல்படுத்தப்படுகிறது.
2. அமெரிக்காவில் தேசிய உணவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேவைப்படும் ஏழைக்குடும்ப பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் நடைமுறை, 1946 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசின் உதவியுடன் மாநில மற்றும் ஸ்தல ஸ்தாபன அரசுகளால் செய்யப்படுகிறது. அதே மாதிரி 1954 ஆம் ஆண்டிலிருந்து தேவைப்படும் ஏழை மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டமும், 1966 ஆம் ஆண்டிலிருந்து காலை உணவும் வழங்கப்படுகிறது.

English

A national food program administered by the U.S. Department of Agriculture (USDA), with input from the U.S. Department of Education and the U.S. Department of Health and Human Services (DHHS). Federal funds and farm commodities are given to states and local administrations to provide nutritious lunches for school children, including free lunches for eligible children from poor families. The program was originated in 1946; a similar program to provide milk for eligible school children started in 1954, and a breakfast program began in 1966.